இமாச்சல்: இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களை தற்காலிக நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை தலைவர் அறையில் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.