இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 45 பேரை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டி அருகே தல்டுகோட் என்ற இடத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 9 பேர் காணவில்லை. மேக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன; 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் சமேஜ்காட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் காணாமல் போயுள்ளனர். மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தை அடுத்து பேரிடர் மீட்பு படையினர் சிம்லா மற்றும் மண்டிக்கு விரைந்துள்ளனர்.