சென்னை: மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக் காக்கும் மண் ஆணி திட்டம் மகத்தான திட்டம் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க மண் ஆணி திட்டம் பயன்படும். மண் மேற்பரப்பில் துளையிட்டு வலுவூட்டப்பட்ட இரும்புக் கம்பிகளை நிலைநிறுத்தும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது எனவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.