சென்னை: ஹிஜாவு நிதிநிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சுரேஷ், துரைராஜ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்தது ஐகோர்ட். சென்னையை தலைமையிடமாக கொண்ட ஹிஜாவு நிதி நிறுவனம் 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.4620 கோடி வசூலித்துவிட்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.