மதுரை: மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு ஓராண்டாக விசாரணை அதிகாரியை நியமிக்காதது ஏன் என ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு விசாரணை அதிகாரியை நியமிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய நிதித்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.