தனியார் நிறுவனத்தில் உயரதிகாரிகள் குத்திக்கொலை: முன்னாள் ஊழியர் துணிகரம்

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் இணையதள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகிய இருவரையும் முன்னாள் ஊழியர் பட்டப்பகலில் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரு அம்ரித்ஹள்ளியில் செயல்படும் ஏரோனிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பனீந்திரா சுப்ரமண்யாவும் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக வினு குமாரும் பதவி வகித்து வந்தனர்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் பிலிக்ஸ் என்பவர் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் துப்பாக்கியுடன் ஏரோனிக்ஸ் மீடியா நிறுவனத்திற்குள் நுழைந்த பிலிக்ஸ் அந்நிறுவன நிர்வாக இயக்குனர் பனீந்திரா மற்றும் தலைமை செயல் அதிகாரி வினுகுமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றார். இரண்டு அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக தகவலறிந்த அம்ரித்ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிலிக்சை தேடிவருகின்றனர்.

Related posts

உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!