நன்றி குங்குமம் தோழி
* மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
* மருதாணியுடன் கொப்பரை தேங்காயை அரைத்து பூசிக் குளித்தால் உடலில் உள்ள சொறி, சிரங்கு நீங்கும்.
* மருதாணி பட்டையையும், வேரையும் அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் கட்டி வந்தால் குணமாகும்.
* பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதை போக்கமருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவ நல்ல குணம் கிடைக்கும்.
* மருதாணி இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஆறாத புண்கள் மேல் கட்டலாம். நகச்சுத்தில் கட்டினாலும் குணமாகும்.
* மருதாணியை அரைத்து நெற்றிப்பொட்டில் பற்று போட்டால் கடுமையான தலைவலி கூட குணமாகும்.
* மருதாணியை அடிக்கடி கை கால்களில் பூசினால் நோய் கிருமிகள் தாக்காது.
– ச.லெட்சுமி, தென்காசி.