ராய்ப்பூர் : ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை என சமீபத்தில் உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.