அந்த பைக் நம்பரை வைத்து, அந்த பகுதியில் பணியில் இருந்த காவலர் கார்த்திக்கு தகவல் கொடுத்து அந்த பைக்கை சுற்றிவளைத்து பிடித்தபோது, அந்த வாலிபர், எதற்காக பைக்கை நிறுத்தினீர்கள். நான் யார் தெரியுமா, என்று மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதை காவலர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததால் கோபமடைந்த அந்த வாலிபர், போக்குவரத்து காவலரின் செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்துவிட்டு சென்றுவிட்டார்.
விசாரணையில், ஷெனாய் நகரை சேர்ந்த ராஜா (29) என்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் ஷெனாய் நகர் பகுதியில் டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக இருப்பது தெரிந்தது. அவர் மீது, 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.