சென்னை: வடபழனி மேம்பாலம் அருகே லாரியின் பின்புறம் பைக் மோதியதில் 17வயது சிறுவன் உயிரிழந்தான். ஹெல்மெட் அணியாமல் சென்றபோது லாரியின் பின்புறம் பைக் மோதி தலையில் அடிபட்டு சிறுவன் சுகனேஸ்வர் உயிரிழந்தான். நண்பரின் பிறந்தநாளை கொண்டாட தாயின் பைக்கை எடுத்துச் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.