சென்னை: தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது என கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை புரிந்ததற்கு கேலோ இந்தியா விளையாட்டுதான் அடித்தளம். ஆசிய விளையாட்டுகளில் 40க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. விளையாட்டில் இந்தியாவை தலைசிறந்த நாடாக்க உழைத்து வருகிறோம் எனவும் கூறினார்.