டெல்லி: டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் மிக அடர்ந்த மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிஷா, மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரத்திலும் மூடுபனி நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.