தொடர்ந்து, 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது. இதனிடையே, மே மாதத்தில் பாலாறு பாயும் பகுதிகளான வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த கோடை மழையால் மே மாதம் சில நாட்கள் பாலாற்றில் நீரோட்டம் இருந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு இல்லாததால், பாலாற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டது. இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் கடந்த சில தினங்களாக இரவில் வெளுத்து வாங்கிய மழையால் பாலாற்றில் நேற்று முன்தினம் முதல் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால், சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.