சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளதது. தூத்துக்குடியில் இரு வீடுகளும், நாகை, நெல்லையில் தலா ஒரு வீடும் சேதமடைந்துள்ளன. மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.