டெல்லி: கனமழை காரணமாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய கட்டடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் நேரடி விசாரணைக்காக நீதிமன்றம் வர வேண்டாம் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய தலைவர் ஆணையிட்டுள்ளார்.