சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.