சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சையில் ஆக.11-ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆக.13-ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.