பெய்துள்ளது.
இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளின் கீழ் அடுக்கு சுழற்சியும், கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 19ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.