தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது மிகத் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை
பெய்துள்ளது.

இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளின் கீழ் அடுக்கு சுழற்சியும், கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 19ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது