இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பவுஞ்சூர், ஓணம்பாக்கம், ஜமீன் எண்டத்தூர், பொலம்பாக்கம், பொறையூர், சித்தாமூர், பெருக்கரணை, சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 1ம் தேதி இரவு கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சுற்று வட்டார பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலை உருவானதால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.