செய்யூர் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னலுடன் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

செய்யூர்: செய்யூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கத்திரி வெயில் முடிந்தும் வெயில் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரமுடியாத சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பவுஞ்சூர், ஓணம்பாக்கம், ஜமீன் எண்டத்தூர், பொலம்பாக்கம், பொறையூர், சித்தாமூர், பெருக்கரணை, சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 1ம் தேதி இரவு கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது.  இதனால், சுற்று வட்டார பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலை உருவானதால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு