ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.