Sunday, July 7, 2024
Home » சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழை.. உடனடி நடவடிக்கை எடுத்த அரசு: முன்பு சந்தித்த பெரும் துயரங்களில் இருந்து மீண்டதாக நெகிழ்ச்சி

சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழை.. உடனடி நடவடிக்கை எடுத்த அரசு: முன்பு சந்தித்த பெரும் துயரங்களில் இருந்து மீண்டதாக நெகிழ்ச்சி

by Neethimaan

சென்னை: சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனமழை வெளுத்து வாங்கியது. மந்தைவெளி, தியாகராயர் நகர், வடபழனி, அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு, அண்ணாநகர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இடைவிலாடமல் கனமழை பெய்தது. 3 மணி நேரம் கனமழை பெய்த போதும் மழைநீர் உடனுக்கூட வடிந்தால் மக்கள் நிம்மதி அடைந்தனர். முந்தைய காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறிந்து கூடுதலாக வடிகால்கள் அமைக்கப்பட்டதால் மிக கனமழை பெய்த போதும் தியாகராயர் நகர், மந்தைவெளி, வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் வடிந்தது.

மாநகராட்சியின் 16 சுரங்க பாதைகள், நெடுஞ்சாலைத்துறையின் 6 சுரங்க பாதைகள் என 22 சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியியேட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். சென்னையில் கடந்த ஆண்டு 5 நாட்களுக்கும் மேல் தண்ணீர் தேங்கிய 172 சாலைகளில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு சிங்கார சென்னை 2.O திட்டம் வெள்ள நிதி உள்ளிட்ட நிதி ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் கட்டமைப்பை புதியதாக அமைத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.

மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக சென்று உரிய உதவிகளை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் களத்தில் சுழன்று வேலை செய்தனர். குறுகிய காலத்தில் கனமழை வெளுத்து வாங்கிய போதும் மழைநீர் உடனுக்குடன் வழிந்தோடியதால் முந்தைய காலங்களில் சந்தித்த பெரும் துயரங்களில் இருந்து சென்னை வாசிகள் மீண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

one + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi