கனமழையால் அறுந்து விழுந்த மின்கம்பி மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி

பம்பல்: அனகாபுத்தூர், யாதவா தெருவை சேர்ந்த போகன் (50). தனது வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. இதில், அங்குள்ள அண்ணல் காந்தி தெருவில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது, அவ்வழியே சென்ற போகனின் 2 எருமை மாடுகளும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், மேலும் உயிர் சேதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது