இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சென்னையில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர், சூளைமேடு, கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், குன்றத்தூர், கிண்டி, பூந்தமல்லி, பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவியது.