தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும். நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

 

Related posts

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!