மும்பை: மராட்டிய மாநிலம் ராய்கட் மற்றும் ரத்தினகிரி மாவட்டங்களில் இன்று நடக்க இருந்த பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மும்பை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.