சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், இலங்கை, குவைத், பிராங்பார்ட், பக்ரைன், துபாய், சார்ஜா, தோகா, அடிஷ் அபாபா, அபுதாபி, மஸ்கட், லண்டன் ஆகிய 12 சர்வதேச விமானங்கள், மற்றும் திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 22க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே நேற்று அதிகாலை 5:45 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், காலை 9:15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.