இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஆக.11-ல் கனமழை பெய்யக்கூடும். ஆக.12-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆக.12-ல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

மாவட்டத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு தூய்மையே சேவை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு!!