Sunday, July 7, 2024
Home » உச்சந்தலை to உள்ளங்கால்… ஆரோக்கியம் மேம்படுத்தும் ஆயுர்வேதம்!

உச்சந்தலை to உள்ளங்கால்… ஆரோக்கியம் மேம்படுத்தும் ஆயுர்வேதம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

‘‘ஆயுர்வேதம், 5000 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்படும் பாரம்பரிய சிகிச்சை முறை. பொதுவாக எலும்பு மற்றும் நரம்பியல் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக மட்டுமே இந்த முறையினை பின்பற்றி வந்த மக்கள் தற்போது அனைத்து சிகிச்சை முறைகளுக்கும் இதனை பின்பற்ற துவங்கியுள்ளனர். மேலும் ஆயுர்வேதத்தில் என்னென்ன நோய்க்கான சிகிச்சைகளை மேற்ெகாள்ள முடியும் என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆயுர்வேதம் மட்டுமில்லாமல் அதனுடன் அலோபதி சிகிச்சைகளையும் இன்டர்கிரேடெட் முறையில் பின்பற்றினால் கண்டிப்பாக மருத்துவ துறையில் அனைத்து நோய்க்கான தீர்வினை கண்டறிய முடியும்’’ என்கிறார் ஏ.வி.ஏ குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனூப்.

‘‘ஆயுர்வேதம் பழங்கால மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறை என்றாலும் இதில் எல்லாவிதமான பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. குறிப்பாக ஹார்ட் அட்டாக் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற உடனடி சிகிச்சைகளுக்கு அலோபதிதான் சரியான தீர்வு. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எவ்வாறு அதன் தாக்கத்தில் இருந்து எதிர்கொள்ளலாம் என்பதற்கு ஆயுர்வேதம் நல்ல பலனை கொடுக்கும்.

குறிப்பாக ஐ.சி.யுவில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுபவர்கள், ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதில் நல்ல தீர்வு காண முடியும். பெண்களைப் பொறுத்தவரை மகப்பேறு ரீதியான பிரச்னைக்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது. நான் இந்த துறைக்கு வரக் காரணம் எனக்கு ஏற்பட்ட முதுகு சார்ந்த பிரச்னைதான். அதில் எனக்கு கிடைத்த பலன் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே துவங்கப்பட்டதுதான் சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம். கொச்சி மற்றும் சென்னை அண்ணாநகரில் இந்த சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் நாங்க சிகிச்சை அளிக்கிறோம்.

ஒவ்வொரு பிரச்னைக்கும் தனிப்பட்ட துறை இயங்குவதால், அதற்கான நன்கு படித்த கைதேர்ந்த மருத்துவர்களை நாங்க நியமித்து அவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கிறோம். மேலும் அதில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அதற்கான ஆய்வுகள் முறைகளும் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு புற்றுநோய் குறித்தான சிகிச்சை முறைகள் சார்ந்த ஆய்வுகள் ஆயுர்வேத துறையில் நடைபெற்று வருகிறது. இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசன் என்ற பிரிவில் ஆயுர்வேதமும் ஒரு பிரிவு என்பதால் இந்தியா மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்த சிகிச்சை முறையினை நிறுவ வேண்டும்.

பொதுவாக ஆயுர்வேதம் என்றால் மசாஜ் மையம் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதில் ேநாய்க்கான சிகிச்சை மட்டுமில்லாமல் அழகியல் துறையிலும் பயன்படுத்த முடியும். சருமம், முடி சார்ந்த பிரச்னைக்கு இதில் நல்ல தீர்வுண்டு. இவை தவிர சாதாரண ஜுரம், சளி, இருமல் போன்ற பிரச்னைக்கும் இங்கு தீர்வு காணலாம்.

ஆயுர்வேதத்தில் உடலில் பிரச்னை இருந்தால் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்றில்லை. நாம் வாழும் காலம் வரை ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவி செய்யும். இரண்டு சக்கர வாகனத்தை பழுது பார்ப்பது போல், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகர்மா சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது உடலில் உள்ள அனைத்து அசுத்தங்களையும் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக செயல்பட உதவும்’’ என்றார் அனூப்.

‘‘சஞ்சீவனம் 2004 முதல் செயல்பட துவங்கியது. அதில் ஆயுர்வேதா, ஹேர் அண்ட் பேஸ் மற்றும் நேச்சுரோபதி என மூன்று துறை சார்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் எலும்பு சார்ந்த சிகிச்சைக்காக மட்டுமே வந்தவர்கள் கோவிட்டிற்கு பிறகு ஜுரம், சளி, இருமல் போன்ற சாதாரண பிரச்னைக்கும் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்’’ என்கிறார் சஞ்சீவனத்தின் ஆயுர்வேத மருத்துவர் யாழினி.

‘‘இங்கு குறிப்பாக பெண்களுக்கு முழு பராமரிப்பு அளிக்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்களின் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் என்ன மாதிரியான உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறோம். பெரும்பாலான பெண்கள் குழந்தை பேறு பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அதற்கான சிகிச்சை மற்றும் குழந்தை பிறந்த பிறகு அவர்கள் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் தங்களின் ஆரோக்கியத்தை மீட்கவும் ஆயுர்வேத முறையில் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன.

இதில் மசாஜ், கஷாயம் சிகிச்சைகள் அடங்கும். இதனை மூன்று மாதங்கள் ெதாடர்ந்து எடுத்துக் கொண்டால் அவர்கள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். கருத்தரிப்பு காலத்தில் எவ்வாறு கவனம் செலுத்துகிறோமோ அதே போல் குழந்தை பிறந்த பிறகும் பெண்கள் தங்களின் ஆரோக்கியம் மேல் முழு கவனம் செலுத்த வேண்டும். சில பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு கால்சியம் மாத்திரைகளை எடுக்க மாட்டார்கள்.

குழந்தைக்கு அவர்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது, அவர்கள் எலும்பில் இருக்கும் கால்சியம் சத்து தானாக குழந்தைக்கு போய் சேரும். அப்போது அவர்களுக்கு அந்த இழப்பு பெரிய அளவில் பாதிக்காது. ஆனால் நாளடைவில் எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். அதனால் குழந்தைப் பேறுக்கு பிறகும் ஒரு பெண் தன்னுடைய உடல் ஆரோக்கியம் மேல் முழு கவனம் செலுத்துவது அவசியம். அந்தக் காலத்தில் நம் பாட்டிகள் எல்லோரும் கால்சியம் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகு போன்றவைகளை தங்களின் உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.

80 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இன்று 40 வயதிலேயே நாம் சோர்வடைந்து விடுகிறோம். அடுத்து பெண்கள் சந்திக்கும் பிரச்னை மெனோபாஸ். இந்த காலக்கட்டத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிலர் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவார்கள். சிலருக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் பல சிக்கல்களை சந்திப்பார்கள். இதற்கு யோகா முழு தீர்வு அளிக்கும். யோகாசனம் கடைபிடிக்கும் பெண்கள் ஜஸ்ட் லைக் தட் தங்களின் மெனோபாஸ் காலத்தினை கடந்திடுவார்கள். சில பெண்களால் தரையில் அமர்ந்து யோகாசனத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு தெரிப்யூடிக் யோகா பலன் அளிக்கும். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப தெரிப்யூடிக் யோகா மாறுபடும்.

இவை தவிர பேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர், முடி உதிர்தலுக்கான சிகிச்சை, சரும பளபளப்பு, பாடி மசாஜ், ஃபுட் ரிப்லெக்சாலஜி என அழகியல் சார்ந்த தனிப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் ஹெர்பல் முறையில் உள்ளன. முடி கொட்டுவதை தடுக்க ஹெட் மசாஜ் செய்து ஹேர் பேக் போடும் போது தலைமுடி நன்றாக வளரும். சருமத்தில் மிகப்பெரிய பிரச்னை சொரியாசிஸ். அதற்கு பத்திய முறைகளை கடைசி வரை கடைபிடித்தால், திரும்ப வராமல் பாதுகாக்கலாம். இவை எல்லாம் தவிர உடல் பருமன் பெண்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன என்று அறிந்து அதற்கான சிகிச்சை முறைகள் தனிப்பட்ட முறையில் அளிக்கப்படும்.

கணினி பார்ப்பதால் ஏற்படும் கண் பிரச்னைக்கு நேத்திர தாரா எடுத்தால் பார்வை தௌிவாகும். குழந்தையின்மை, ஆண்-பெண் இருவருக்கும் என்ன பிரச்னை என்று அறிந்து அதற்கு ஏற்ப மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். இதன் மூலம் ஹார்மோன்களில் மட்டும் மாற்றம் ஏற்படுத்தாமல், அவர்கள் உடல் முழுதும் அந்த மாற்றத்தினை கொடுக்கும் போது, அதில் நல்ல பலன் கிடைக்கும்.

அதே போல் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் அதற்கான சிகிச்சைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். பாலி சிஸ்டிக் ஓவரி மற்றும் ஃபைப்ராய்ட் பிரச்னைக்கும் மருந்து மூலம் குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை மற்றும் எமர்ஜென்சி சிகிச்சை முறைகள் தவிர மற்ற பிரச்னைக்கும் ஆயுர்வேதம் நல்ல பலனைக் கொடுக்கும்’’ என்றார் மருத்துவர் யாழினி.

தொகுப்பு: நிஷா

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi