நோய் தீர்க்கும் ஆசனங்கள்

நன்றி குங்குமம் தோழி

யோகாசனப் பயிற்சிகள் செய்வதால் பல நன்மைகள் உண்டு. உடலை நல்ல நிலையில் வைத்திருப்பது மட்டுமின்றி நோய்கள் சேராமல் தடுக்கின்றன. இதனால் உடல் உள்ளுறுப்புகள் பலமடைகின்றன. வீண் சதைப் பிடிப்புகள் ஏற்படாது. சுறுசுறுப்பு, புத்தித் தெளிவு, நினைவாற்றல் அதிகப்படும்.பிராணாயாமம்: நுரையீரல் ஆரோக்கியமாகும். ரத்தம் எல்லா உடல் திசுக்களுக்கும் சென்றடையும். எனவே உடல் நன்முறையில் இயங்கும்.பதுமாசனம்: பதுமம் என்றால் தாமரை. தாமரை வடிவில் அமர்தல். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூளையை நன்றாக செயல்பட உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். செரிமான பிரச்னையை போக்கும்.

மயூராசனம்: வயிற்றுப் பிணிகள் நீங்கும். முக்குற்றங்களும் தன்னிலைப்படும். செரிமான உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாயும்.

புஜங்காசனம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். முதுகுத் தண்டுக்கு பயிற்சி கிடைக்கும்.

தனுராசனம்: பசியைத் தூண்டும். கல் பிணிகளுக்கு சிறந்தது.

சலபாசனம்: மலச்சிக்கலை போக்கும். வயிற்றின் உள் உறுப்புகளுக்கு பயிற்சி தரும். இதய நோய், நுரையீரல் நோய் உடையோர் இதை செய்யக் கூடாது.

சவாசனம்: களைப்பைப் போக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

சிரசாசனம்: மூளைக்கு அதிகம் ரத்தம் பாய்ந்து மூளை பலப்படும். நரம்பு மண்டலத்தைத் தூண்டும். மாதவிடாய், கர்ப்ப காலங்களில் செய்யக் கூடாது.

சர்வாங்காசனம்: நரை, திரை, மூப்பை மாற்றி இளமையை உண்டாக்கும். உடலின் எல்லா உறுப்புகளும் பலப்படும். கருப்பை கோளாறு நீங்கும். தலைவலி, நாடி பலமின்மை,
மலச்சிக்கல் தீரும்.

– எஸ்.ராமதாஸ், புதுச்சேரி.

Related posts

உங்க லிகமென்ட் பேசுகிறேன்!

பூண்டு பாலின் நன்மைகள்

நோயை விரட்டும் கண்டங்கத்தரி