தலை துண்டித்து ரவுடி கொலை

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ் (எ) கழுத்துவெட்டி சுந்தர்ராஜ்(33). திருமணமாகாதவர். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளது. இவரது பக்கத்து வீட்டில் அவரது சித்தப்பா மணி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மணி தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு கட்டிலில் சுந்தர்ராஜ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடலுக்கு அருகிலேயே தலை துண்டிக்கப்பட்டு தனியாக இருந்தது. அவரது உடலை பார்த்து மணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை நடந்த இரவு முன்னதாக நண்பர்களுடன் சுந்தர்ராஜ் மது அருந்தியுள்ளார். அவருக்கு போதை ஏறியதும் அரிவாளால் சரமாரி வெட்டி, கழுத்தை அறுத்து தலையை தனியாக துண்டித்து உடல் அருகிலேயே வைத்துவிட்டு நண்பர்கள் தப்பி சென்றது தெரியவந்தது. கடந்த 2022ல் கொத்தனார் ஜெயபால் என்பவரை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

Related posts

சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் நடைபெறவுள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை..!!

பல்கலைக்கழக இணை வேந்தரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை