உடலுக்கு அருகிலேயே தலை துண்டிக்கப்பட்டு தனியாக இருந்தது. அவரது உடலை பார்த்து மணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை நடந்த இரவு முன்னதாக நண்பர்களுடன் சுந்தர்ராஜ் மது அருந்தியுள்ளார். அவருக்கு போதை ஏறியதும் அரிவாளால் சரமாரி வெட்டி, கழுத்தை அறுத்து தலையை தனியாக துண்டித்து உடல் அருகிலேயே வைத்துவிட்டு நண்பர்கள் தப்பி சென்றது தெரியவந்தது. கடந்த 2022ல் கொத்தனார் ஜெயபால் என்பவரை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.