Monday, July 1, 2024
Home » வீட்டை விற்று பணம் தராததால் ஆத்திரம் தலையில் சிலிண்டரை போட்டு தந்தை கொலை: மகன் கைது

வீட்டை விற்று பணம் தராததால் ஆத்திரம் தலையில் சிலிண்டரை போட்டு தந்தை கொலை: மகன் கைது

by Karthik Yash

பெரம்பூர்: ராஜமங்கலத்தில் சொத்து தகராறில், காஸ் சிலிண்டரால் அடித்து தந்தை படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 6வது தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68), இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மதுசூதனின் மூத்த மகன் ஜார்ஜ் புஷ் (34), தந்தை மதுசூதனனுக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மதுசூதனன் வீட்டை விற்க முடியாது எனவும், வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு பங்கு உள்ளது எனவும் கூறி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தந்தை, மகனுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு 8 மணி அளவில் ஜார்ஜ் புஷ் வீட்டிற்கு வந்து தனது தந்தையிடம் வீட்டை எழுதித் தர முடியுமா, முடியாதா என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ் புஷ் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது தந்தை மதுசூதனன் தலை, உடம்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கினார். மேலும் மதுசூதனன் அவரிடமிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். அப்போது அருகில் கிடந்த காலி சிலிண்டரை எடுத்து ஜார்ஜ் புஷ், தந்தை மதுசூதனனின் தலையில் போட்டுள்ளார். இதில் மதுசூதனன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கொளத்தூர் உதவி கமிஷனர் சிவகுமார், ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மதுசூதனன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்த ஜார்ஜ் புஷ்சையும் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் பெற்ற மகனே தந்தையை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

You may also like

Leave a Comment

5 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi