ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ஆபாச செய்கை: ஆசாமிக்கு தர்மஅடி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ஓடும் பஸ்சில் ஆபாசமாக நடந்த ஆசாமியை இளம்பெண் சரமாரியாக செருப்பால் தாக்கினார். அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டு குவிகிறது. கோவையை சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து இளம்பெண் கோவை பஸ்சில் ஏறினார். அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த 50 வயதுக்கு மேலுள்ள ஆண் ஒருவர் திடீரென பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். ஆனால் அந்த நபர் மீண்டும் வேறு கோணத்தில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் ஆபாச செய்கை காட்டி தொல்லை கொடுத்து கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த இளம்பெண், பஸ்சில் உரத்த குரலில் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் உஷாரான அந்த நபர், பஸ்சில் இருந்து மளமளவென கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க முயன்றார். ஆனால் பஸ்சில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கிய இளம்பெண், தனது காலில் இருந்த ெசருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார். சில வாலிபர்களும் அவரை அடித்து உதைத்தனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்டனர். விசாரணையில், அவரது பெயர் லாரன்ஸ் (50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண், லாரன்சை செருப்பால் அடித்தபோது சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம்ெபண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்