லக்னோ : உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவாகி உள்ளார். ஆசிரமத்தில் காவலர்கள் சோதனை நடத்திய நிலையில் பாபா நாராயணன் ஹரி இல்லை. சாமியார் எங்கே பதுங்கியுள்ளார் என உத்தரபிரதேச காவல்துறை தேடி வருகின்றனர். ஹத்ராஸில் நேற்று ஆன்மிக சொற்பொழிவின்போது கூட்ட நெரிசலில் 108 பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர்.