அரியானா: அரியானா மாநிலத்தில் தமது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண்கர் நகரை அடுத்த ரதார் கிராமத்தில் சொத்துப் பிரச்சனையில் 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ளார். 2 ஏக்கர் நிலத்துக்காக தனது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை பூஷன் கழுத்தறுத்து கொன்றுள்ளார்.
அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நாராயண்கர் அருகிலுள்ள ரதார் கிராமத்தில் சொத்து பிரச்சனை காரணமாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பூஷன் தாய் (65), அண்ணன் ஹரிஷ் (35 வயது), மனைவி சோனியா (32 வயது) மற்றும் சகோதரரின் இரு குழந்தைகள் ஆகியோரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பூஷன், கொலை செய்தது மட்டுமின்றி, கொடூரமாக கொலை செய்து இறந்த உடல்கள் அனைத்தையும் எரிக்க முயன்றனர். ஆனால் இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்களை மீட்டு அருகில் உள்ள அம்பாலா கான்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு ஏக்கர் நிலம் தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரருக்கு நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே பல வாக்குவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்த பூஷனை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.