சென்னை: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 200 பேருக்கு சுய தொழில் செய்ய ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.1 கோடி மானியம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.