ரூ.20 லட்சம் கையாடல் செய்ய முயற்சி எஸ்ஐ, ரைட்டர் அதிரடி சஸ்பெண்ட்

கோவை: கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் கைப்பற்றிய ரூ.20 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டர் யூசுப் மற்றும் தலைமை எழுத்தர் சண்முகசுந்தரம் ஆகியோர் கையாடல் செய்ய முயற்சித்ததாக புகார் சென்றது. இதையடுத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது எஸ்.ஐ, எழுத்தர் ஆகியோர் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். இதனால் பணத்தை முறைகேடாக அபகரிக்க முயன்ற 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு