சென்னை: அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து, ஆண்டுதோறும் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்க ரூ.12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் முதல்கட்ட வகுப்புகள் நடத்தப்படும் எம அறிவிக்கப்பட்டுள்ளது.