குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள ரஞ்சித் வீட்டில் சாம் அலெக்சாண்டர், தாய் ரோசிலின் புளோரோ ஆகியோர் கடந்த 6 மாதங்களாக வசித்துள்ளனர். சாம் அலெக்சாண்டர் உடல்நிலை சரியில்லாதவர். மது குடிக்கும் பழக்கமும் உள்ளது. அதை நிறுத்தும்படி ரோசிலின் புளோரா கண்டித்தும் கேட்பதில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கணவர் மீதான கோபத்தில், ரோசிலின் புளோரா அவரை சரிவர கவனிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் எழுந்த சாம் அலெக்சாண்டர் மற்றொரு படுக்கை அறையில் படுத்திருந்த மனைவி ரோசிலின் புளோராவை சரமாரியாக கத்தியால் குத்தினார். சுத்தியலாலும் தலையில் தாக்கினார். இதில் நெற்றி, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் சாம் அலெக்சாண்டர், உறவினர்களுக்கு போன் செய்து மனைவியை கொலை செய்ததை தெரிவித்துள்ளார். தகவலறிந்து ஆரல்வாய்மொழி போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து சாம் அலெக்சாண்டரை கைது செய்தனர்.