இதனிடையே, இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்,
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரானின் புதிய அதிபராக தேர்வான மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் இஸ்மாயில் ஹனியே. தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனியே படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.