காசா: அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள 230 இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் முதற்கட்டமாக 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் சிறையிலிருந்து 50 பாலஸ்தீனர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் 50 பாலஸ்தீனர்களில் குழந்தைகள், பெண்கள் மட்டுமே உள்ளனர்.