சென்னை: மண்டபங்கள், வணிக வளாகம், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கும் விதிகளை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்துள்ளார். மதுவிலக்கு மற்றும் கலால்துறையின் சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.