உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.