சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக 21 பேரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது.