மதுரை: குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. செங்கோட்டையைச் சேர்ந்த செண்பகராஜன் என்பவர் 307 கிலோ குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செண்பகராஜன் மனுத்தாக்கல் செய்தார்.