குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் சடலம்

நெல்லை: சென்னையில் இருந்து நெல்லை வழியாக குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம்போல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு வந்து குருவாயூர் நோக்கி புறப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே செல்லும்போது முன்பதிவு செய்யாத பெட்டியில் 50 வயது பெண் இறந்து கிடப்பதை திருச்சூர் ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். அவரது கைப்பையில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்காக ரயில் டிக்கெட் இருந்தது. இதை வைத்துக் கொண்டு திருச்சூர் ரயில்வே போலீசார், இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்து பயணித்த காரணத்தால், இவ்விரு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்து இறந்த பெண் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு