Wednesday, July 3, 2024
Home » தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேருக்கு குண்டாஸ்

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேருக்கு குண்டாஸ்

by Ranjith

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டாசில் கைது செய்யபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, மாவட்டம் முழுவதும் உள்ள 20 காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் உத்தரவிட்டு இருந்தார். இதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, சாராயம் வியாபாரம் என தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் அறிவுறித்திருந்தார். அதன்படி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன், திருக்கழுகுன்றம் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த அகமத்பாஷா (34), மசூதி தெருவை சேர்ந்த சலிம் பாஷா (41) மற்றும் செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பவானி (47) ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

20 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi