துப்பாக்கி சண்டையில் போலீஸ், நக்சலைட் பலி

கன்கர்: கன்கர் மாவட்டம், சோட்டே பெத்தியா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹிடூர் கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டு பகுதிக்கு பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நேற்று ரோந்து சென்றனர்.

இதையடுத்து, மாநில போலீசின் மாவட்ட ரிசர்வ் படை(டிஆர்ஜி), பஸ்தார் பைட்டர்ஸ் ஆகிய மாநில போலீஸ் படை மற்றும் பிஎஸ்எப் படை வீரர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சலைட்டுகள் சரமாரியாக சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிசண்டை நடந்தது. இந்த சண்டையில்,போலீஸ்காரர் மற்றும் ஒரு நக்சலைட் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

உதகை அருகே யானைகள் நடமாட்டத்தால் அச்சம்: ரேஷன் கடையில் பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானையை அடர் வனத்தில் விரட்டக் கோரிக்கை

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை: கட்டுமான பணி மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி