அதன்பின்னர் சித்தூரில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்த வேதவதி, ஓராண்டுக்கு முன், அன்னமையா மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு மாறுதலாகி வந்தார். தற்போது ராயசோட்டி நகரில் உள்ள ராஜீவ்காந்தி குடியிருப்பு அருகே உள்ள இந்திரம்மா காலனியில் தஸ்தகிரியுடன் வேதவதி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேதவதி ராயசோட்டியில் உள்ள எஸ்.பி. அலுவலக பணியில் இருந்தார். மதியம் அலுவலகத்தில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
இதனால் அங்கிருந்த சக போலீசார் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வேதவதி ரத்த வெள்ளத்தில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு ராயசோட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் வேதவதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துப்பாக்கி தவறுதலாக சுட்டு கொண்டதா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.