சாக்கடைக்குள் கிடந்த துப்பாக்கி

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் சவுராஷ்ட்ரா தெரு அருகே மன்னார் பிள்ளை சந்தில் நேற்று சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்கடைக்குள் ஏர் பிஸ்டல் துப்பாக்கி ஒன்று கிடந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இந்த துப்பாக்கி சாக்கடையில் வீசப்பட்டு பல மாதங்கள் ஆனது போல் துருப்பிடித்து இருந்ததும், அந்த துப்பாக்கியில் “ஏர் பிஸ்டல் மார்க்-3’’ என குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு