Wednesday, July 3, 2024
Home » கும்மிடிப்பூண்டி அருகே பட்டா கத்தியுடன் வந்து விபத்துக்குள்ளான வாலிபர்கள்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

கும்மிடிப்பூண்டி அருகே பட்டா கத்தியுடன் வந்து விபத்துக்குள்ளான வாலிபர்கள்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

by Suresh

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் பட்டாகத்தியுடன் மீட்கப்பட்ட வாலிபர்கள் இருவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, நேற்றுமுன்தினம் இருசக்கர வாகனத்தில் இரு வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது, திடீரென சாலை விபத்தில் அவர்கள் சிக்கினர். இதில், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இருவரும் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களுக்கு முதல் உதவி செய்ய அருகில் சென்றனர். அப்போது, இருவரிடமும் பட்டா கத்தி இருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் விலகிச் சென்றுவிட்டனர்.

இதை தொடர்ந்து, இந்த சம்பம் குறித்து ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், விபத்துக்குள்ளான இருவரும் மதுபோதையில் பைக் ஓட்டி வந்தனர் என்பது தெரியவந்தது. இவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் (24) மற்றும் காராமணி மேட்டைச் சேர்ந்த சந்துரு (25) ஆகியோர் ஆவர். இதில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சந்துரு கவலைக்கிடமான நிலையில் அவசர பிரிவிலும், புருஷோத்தமன் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாகத்தி மற்றும் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

எதற்காக இவர்கள் பட்டாகத்தியுடன் வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவீரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்தபோது அங்கிருந்த மக்கள் தங்கள் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

You may also like

Leave a Comment

seventeen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi